சனி, 7 பிப்ரவரி, 2009

அமெரிக்கர்களின் தொலை நோக்குப்பார்வை

ஆப்கானிஸ்தானில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு,இப்போது அமெரிக்கர்கள் செய்யும் அதே (தீவிர மதவாதிகளை கட்டுபடுத்தும்) வேலையை சோவியத் யூனியன் செய்து வந்தது.ஆனால் அமெரிக்க புத்தி சாலிகள் பெரும் பணத்தை செலவு செய்து சோவியத் யூனியனை விரட்டி விட்டு அந்த வேலையை தாங்கள் எடுத்து கொண்டார்கள். இப்போது செமத்தியாக உதை வாங்கி அந்த வேலையை அரையும் குறையுமாக செய்து வருகிறார்கள்.
ஒரு புதிய செய்தி என்னவென்றால், சமீபத்தில் தாலிபான்கள் அமெரிக்க படையினருக்கு, பொருட்கள் எடுத்து செல்லும் பாலத்தை தகர்த்தனர். அதனால்,அமெரிக்க வேண்டு கோளின் படி தனது ஆப்கன் பாதையில் அமெரிக்க படையினருக்கு, பொருட்கள் எடுத்து செல்லும் அனுமதியை ரஷ்யா தந்திருக்கிற்து. ஏனென்றால் ஆப்கானிஸ்தானில் தீவிர வாதிகளை கட்டுக்குள் வைத்திருப்பது,தனது எல்லை புற பிரதேசங்களில்,அனுகூலமான சூழ் நிலைக்கு உதவி செய்யும் என ரஷ்யா நினைக்கிறது.
இரண்டாவது,இராக்.
சதாம் செய்த அதே வேலையை அமெரிக்கா இப்போது இராக்கில் செய்து வருகிறது.நிறைய குறைகள் இருந்தாலும்,இராக்கில் மத தீவிரவாதிகளின் ஆதிக்கம் சதாம் காலத்தில் குறைவுதான். முல்லாக்களை அவர் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார். அவரை ஆளுமை செய்வதை விட்டு விட்டு அவரை அகற்றியதன் மூலம்,அந்த வேலை இவர்கள் தலையில் விழ,இப்போது உதை வாங்கி , முழி பிதுங்கி அதே வேலையை செய்து வருகிறார்கள்.
இதிலிருந்து நாம் பாடம் கற்று கொள்ள வேண்டும். நம் நாட்டு நகர்புற படித்த மேல் தட்டு வர்க்கம் அமெரிக்கர்கள் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு வைத்திருப்பதாய் மன பூர்வமாக நம்புகிறது. நிறைய அமெரிக்க தீர்வுகள் அரைகுறை மேதாவிதனமாகவும்,தொலை நோக்குபார்வை குறைவாகவும் இருக்கின்றன.

இதனால் அமெரிகக் தீர்வுகளை,அலசி ஆராய்ந்து நமக்கேற்ற முறையில் மாற்றி அமைத்து உபயோகிப்ப்துதான் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக